தமிழ்நாடு
தமிழக ஆசிரியர்களுக்கு விப்ரோ நிறுவனம் சிறப்புப் பயிற்சி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
கர்நாடகாவில் விப்ரோவின் அசிம் பிரேம்ஜி பலகலைக்கழகம் ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வழங்கி வருகிறது. அதே போன்று ஒரு சிறப்புப் பயிற்சி தமிழக ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜியுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதில் பல்வேறு முக்கியமான பிரச்சனைகள் குறித்து முதல்வர் விவாதித்துள்ளார்.
அதில், கர்நாடகாவில் உள்ள அசிம்பிரேம்ஜி பலகலைக்கழகம் போன்று ஒரு பலல்கலைக்கழகம் தமிழகத்தில் உருவாக்க வேண்டும். அதற்கு நீங்கள் உதவ வேண்டும்.
தமிழகத்திலிருந்து விப்ரோ நிறுவனத்தில் ௨௨,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தொடர்ந்து தமிழகத்தில் விப்ரோவின் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். அதற்குத் தேவையான உதவிகளைத் தமிழக அரசு உங்களுக்குச் செய்யும்.
தமிழக இளைஞர்களுக்கு, தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகளையும் நீங்கள் வழங்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜியிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆலோசனை கூடத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.