இந்தியா
செப்டம்பர் 1 கடைசி தேதி: மீறினால் பணம் எடுக்க முடியாது என எச்சரிக்கை!
![aadhar-759 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/09/aadhar-759.jpg)
செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் ஈபிஎப் கணக்கு மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைக்காவிட்டால் ஈபிஎப் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஒவ்வொரு இந்தியனின் அடையாளமாக கருதப்படும் ஆதார் எண்ணை அனைத்து ஆவணங்களிலும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கிக்கணக்கு, ரேஷன் கார்டு, பான் கார்டு உள்பட அனைத்து ஆவணங்களிலும் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்திய நிலையில் தற்போது ஈபிஎப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது
தொழிலாளர்களிடம் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்து வரவு வைக்கப்படும் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில் அதற்கான காலத்தையும் அவ்வப்போது நீடிக்கப்பட்டு வந்தது
இந்த நிலையில் தற்போது ஈபிஎப் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 1ஆம் தேதி கடைசி நாள் என்றும் அதற்குள் இணைக்காதவர்கள் தங்களின் கணக்குகளில் இருந்து அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாது என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது
அதேபோல் ஆதார் எண்ணை இணைக்காத கணக்கில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையையும் அவரது கணக்கில் செலுத்த முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் அனைவரும் ஈபிஎப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.