சினிமா
கஜா புயல்; சிவகுமார் குடும்பம் ரூ.50 லட்சம் நிதியுதவி!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ளனர்.
கேரளாவில் வெள்ளம் பாதித்த போது, சூர்யா – கார்த்தி இணைந்து 25 லட்சம் ரூபாய் முதல் ஆளாக கொடுத்தனர். இவர்களை தொடர்ந்து, நடிகர் கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கேரளாவிற்கு லட்சங்களில் நிதியுதவி அளித்தனர்.
ஆனால், சமீபத்தில் தமிழகத்தை தாக்கிய கஜா புயலால், டெல்ட்டா மாவட்டங்களான நாகை, வேதாரண்யம் பகுதிகள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது.
ஆனால், தமிழ்நாட்டிற்கு உதவி செய்ய அண்டை மாநில நடிகர்கள் இல்லை; தமிழ் நாட்டு நடிகர்களே இதுவரை முன் வரவில்லை. நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், சிவகார்த்திகேயன், ஆரி உள்ளிட்டோர் முதல் கட்டமாக குரல் கொடுத்துள்ளனர்.
நடிகர் ரஜினியின் மக்கள் மன்றம் சார்பாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு நிவாரண பொருட்கள் சென்றதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்களான நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து 50 லட்சம் ரூபாய் நிதியை அளிக்க முன்வந்துள்ளனர்.