Connect with us

தமிழ்நாடு

அனைத்து கடைகளும் 6 மணி வரை மட்டுமே: நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து கூடுதலாக கட்டுப்பாடுகளும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சேலம் மாவட்டத்திலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து சேலம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சேலம்‌ மாநகர எல்லைக்குள்‌ செயல்படும்‌ அனைத்து மால்கள்‌, ஜவுளி கடைகள்‌, நகைக்‌கடைகள்‌, வணிக வளாகங்கள்‌, சூப்பர்‌ மார்க்கெட்கள்‌ ஆகியவை மாலை 6.00 மணிவரை மட்டும்‌ செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும்‌, மேற்படி வணிக நிறுவனங்கள்‌ ஞாயிற்றுக்கிழமை செயல்பட அனுமதியில்லை.

செவ்வாய்பேட்டை மெயின்ரோடு, நாவலர்‌ நெடுஞ்செழியன்‌ சாலை, லாங்லி நோடு, பால்‌ மார்க்கெட்‌, லீபஜார்‌, வீரபாண்டியார்‌ நகர்‌ ஆகிய பகுதிகளில்‌ உள்ள அனைத்து கடைகளும்‌ மாலை 6.00 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

வ.உ.சி மார்க்கெட்‌, சின்னகடை வீதி ஆகிய இடங்களில்‌ செயல்படும்‌ பூ, பழம்‌ மற்றும்‌ காய்கறி கடைகள்‌ மாலை 6.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

துணிக்கடைகள்‌, நகைக்கடைகள்‌, மால்கள்‌, வணிக வளாகங்கள்‌ போன்ற அனைத்து வணிக நிறுவனங்களிலும்‌ குளிர்சாதன வசதி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

சேலம்‌ ஊரகம்‌

வார இறுதி நாட்களான சனி மற்றும்‌ ஞாயிற்றுக்கிழமைகளில்‌ ஏற்காட்டிற்கு வரும்‌ சுற்றுலா பயணிகளுக்கு முழுவதும்‌ தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற நாட்களில்‌ ஏற்காட்டிற்கு பயணிக்கும்‌ பயணிகள்‌ கோவிட்‌-19 கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள்‌ செலுத்தி சான்றிதழ்‌ வைத்திருப்பவர்கள்‌ மட்டும்‌ அனுமதிக்கப்படுவர்‌. கொங்கணாபும்‌ வாரச்சந்தை 23.08.2021 வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது. வீரகனூர்‌ வாரச்சந்தை 23.08.2021 வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது.. மேட்டர்‌ அணை பூங்கா 29.09.2021 வரை பொதுமக்கள்‌ செல்ல தடைவிதிக்கப்படுகிறது.

இறைச்சி மற்றும்‌ மீன்‌ சந்தைகளில்‌ மக்கள்‌ கூடுவதை தவிர்க்கும்‌ பொருட்டு திறந்த வெளியில்‌ தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள்‌ உறுதி செய்ய வேண்டும்‌.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆன்மீகம்29 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்40 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா10 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!