Connect with us

தமிழ்நாடு

டிசி கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும்: நீதிபதி எச்சரிக்கை!

Published

on

மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுக்கவில்லை என்றால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணை செய்யும் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளியில் சேர்ப்பதற்காக மாணவர்கள் செல்லும்போது அவர்களுக்கு மாற்றுச் சான்றிதழை உடனே வழங்க வேண்டும் என்றும், கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கக்கூடாது என்றும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக பள்ளி கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுக்காத புகார் வரும் பட்சத்தில் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்படும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி எச்சரித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தக் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து அரசு பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாற்றுச் சான்றிதழை தர மறுப்பதாக புகார்கள் வந்துள்ளது.

இந்த புகார்கள் குறித்த வழக்கில் தான் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை அடுத்து தனியார் சுயநிதி பள்ளிகள் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!