சினிமா செய்திகள்
த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா எல்லாம் தெய்வப்பெண்கள்: ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா
த்ரிஷா அனுஷ்கா நயன்தாரா போன்ற நடிகைகள் எல்லாம் தெய்வ பெண்கள் என்றும் அவர்கள் தங்களுடைய சோகத்தை மறைத்துக் கொண்டு வெளியில் சிரித்துக்கொண்டே நடிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ குடும்பத்தில் பிறந்தவர் ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா. இவர் சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு ஐந்து மகா குருக்களிடம் தீட்சை பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா நடிகைகள் குறித்து கூறும்போது த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா மட்டுமின்றி பொதுவாக நடிகைகள் எல்லாருமே எல்லோரும் அன்புக்கு ஏங்குபவர்கள் என்றும், பணத்திற்காக அவர்கள் நடிக்க வந்தாலும் ஒரு காலகட்டத்தில் அவர்களுக்கு தொழில் மேல் கசப்பு தன்மை ஏற்படும் என்றும், அப்போது அவர்கள் ஒரு துணையை தேடுவார்கள் என்றும், அந்த துணை துரோகம் செய்யும் போது அவர்களுக்கு மன வலி ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் நடிகைகளிடம் கோடிக்கணக்கான பணம் இருப்பதால் எந்த மன்மதனையும் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் திருமணம் செய்ய மாட்டார்கள். உள்ளிருக்கும் வேதனையை மறைத்துக் கொண்டு போலியான நடிப்பை வெளியே காட்டுவார்கள். அவர்களுக்கு இருக்கும் நல்ல மனசு யாருக்கும் வராது. அவர்கள் பாசத்துக்கு ஏங்குபவர்கள். உண்மையில் சொன்னால் அவர்கள் தான் உண்மையான தெய்வ பெண்கள் என்று கூறினார்.
மேலும் சிம்புவின் திருமணம் குறித்த கேள்விக்கு அவர் பதில் சொன்ன லட்சுமி அம்மா, ‘சிம்புவுக்கு தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ரகசியம் இருக்கும் என்றும், அதேபோல் சிம்புவின் குடும்பத்திற்கும் ஒரு ரகசியம் இருக்கிறது என்றும், சிம்பு என்னிடம் நேரில் வந்து கேட்டு அந்த ரகசியத்தை தெரிந்து கொண்டு தோஷ நிவர்த்தி செய்து கொண்டால் அவருக்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும் என்றும் கூறினார். ஆத்ம சித்தர் லட்சுமி அம்மாவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.