உலகம்
கொரோனா பாதித்தவர்களுக்கு 2 வாரங்களில் மாரடைப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு வாரத்தில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வு ஒன்றின் முடிவு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் இருந்து மீண்டவர்களுக்கு இரண்டு வாரங்களில் மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருப்பதாக ஸ்வீடன் நாட்டின் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது
இதுகுறித்து தி லான்செட் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்று 3.5 லட்சம் பேர்களுக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 86 ஆயிரம் கொரோனா நோயாளிகளுக்கு கடுமையான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் இருந்து கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்வீடன் நாட்டில் உள்ள உமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறும்போது கொரோனா பாதித்த பிறகு முதல் இரண்டு வாரங்களில் கடுமையான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக வந்து குணமான பின்னரும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று அறிவித்துள்ளார்
மேலும் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தடுப்பூசி எவ்வளவு அவசியம் என்பதையும் இந்த ஆய்வு முடிவு காட்டுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டாலும் மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
A study of #COVID19 cases using Swedish registry data suggests COVID-19 is a risk factor for acute myocardial infarction and ischaemic stroke.
The findings further highlight the need for vaccination, say authors. Read in full: https://t.co/h9M7LTtZGT pic.twitter.com/vg4Mz8xJRa
— The Lancet (@TheLancet) August 2, 2021