விளையாட்டு
வீழ்த்திய என்னையே பி.வி.சிந்து அழ வைத்துவிட்டார்… நெகிழும் வெற்றியாளர் தை சூ!
ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பிவி சிந்துவை வீழ்த்திய என்னையே அவரது செயலால் நெகிழ்ந்து அழ வைத்துவிட்டார் என வெள்ளிப் பதக்க வெற்றியாளர் தை சூ தெரிவித்துள்ளார்.
தைவான் போட்டியாளர் தை சூ டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பேட்மின்டனில் பிவி சிந்து உடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் பங்கு பெற்று விளையாடினார். அந்தப் போட்டியில் பிவி சிந்துவை வீழ்த்தி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார் தை சூ. வீழ்ந்த பிவி சிந்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியின் வெண்கலம் வென்றார்.
இந்த சூழலில் பிவி சிந்து குறித்து தை சூ கூறுகையில், “தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல் போன போட்டியில் நான் மிகவும் உடைந்து காணப்பட்டேன். அப்போது என்னை நோக்கி ஓடி வந்த பிவி சிந்து என்னைக் கட்டி அணைத்து நான் சிறப்பாக விளையாடியதாகவும் அன்றைய நாள் எனக்கானதாக அமையவில்லை என்றும் கூறி என்னை ஆறுதல் சொல்லி தேற்றினார்.
முன்னதாக சிந்துவைத் தான் நான் தோற்கடித்து இருந்தேன். ஆனால், அவர் செய்த செயலால் நான் நெகிழ்ச்சி அடைந்து அழுதுவிட்டேன்” என உருக்கமுடன் தை சூ தனது சமுக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.