தமிழ்நாடு
கோவை விரையும் கமல்..!- என்ன காரணம்?
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், நாளை இரண்டு நாள் பயணமாக கோயம்பத்தூர் விரைகிறார்.
கமல்ஹாசன், மய்யம் கட்சியை ஆரம்பித்தது முதல் கோயம்புத்தூரை முற்றுகையிட்டுப் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். குறிப்பாக மய்யம் கட்சி, கோவையில் தான் மிக வலுவாக இருக்கிறது என்று கூறப்பட்டது.
அதன் பொருட்டே கடந்த சட்ட மன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் கமல் களமிறங்கினார். அங்கு அவருக்கும் பாஜகவின் வானதி சீனிவாசனுக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில், வானதி சீனிவாசன் வெற்றிவாகை சூடினார்.
என் நேசத்திற்குரிய கோவை மக்களைச் சந்திப்பதற்காகவும், மக்கள் நீதி மய்யம் சார்பாக சில நலத்திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காகவும் நாளை கோயம்புத்தூர் வருகிறேன். இரண்டு நாட்கள் அங்கிருப்பேன். சந்திப்போம் உறவுகளே.
— Kamal Haasan (@ikamalhaasan) August 1, 2021
இதைத் தொடர்ந்து கமலின் வலது கையாக இருந்த மருத்துவர் மகேந்திரன், மய்யம் கட்சியிலிருந்து விலகி திமுக பக்கம் சாய்ந்தார். பல்வேறு முக்கிய உறுப்பினர்களும் மய்யத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்கள்.
இந்த சம்பவங்கள் அரங்கேறி சில வாரங்களே முடிந்துள்ள நிலையில், கமல் கோயம்பத்தூர் செல்கிறார். இது குறித்து அவர், ‘என் நேசத்திற்குரிய கோவை மக்களைச் சந்திப்பதற்காகவும், மக்கள் நீதி மய்யம் சார்பாக சில நலத்திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காகவும் நாளை கோயம்புத்தூர் வருகிறேன். இரண்டு நாட்கள் அங்கிருப்பேன். சந்திப்போம் உறவுகளே’ என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.