பிற விளையாட்டுகள்
குத்துச்சண்டை காலிறுதியில் சதீஷ் குமார் தோல்வி!
![sathiesh boxing - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/sathiesh-boxing.jpg)
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 91 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சதீஷ்குமார் காலிறுதியில் தோல்வியடைந்தார்.
ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 91 கிலோ எடைப்பிரிவில் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிரியை எதிர்த்து இந்தியாவின் சதீஷ் குமார் விளையாடினார்.
இதில் கடைசி வரை கடுமையாகப் போராடிய சதீஷ் குமார் 5-0 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார். சதீஷ் குமார் எப்படியும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் சரியாக விளையாட முடியவில்லை. இதனால் இந்தியாவின் இன்னொரு பதக்க கனவு இல்லாமல் போய்விட்டது.
பிவி சிந்து இன்று வெங்கல பதக்கத்தை வெல்வதற்கான போட்டியில் பங்கேற்க இருக்கிறார். ஆடவர் ஹாக்கி அணியினர் இன்று காலிறுதி போட்டியில் விளையாட உள்ளனர்.
இதுவரை இந்தியா சார்பாக பளுதூக்கும் போட்டியில் மீரா பாய் சானு மட்டும் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். இந்தியா மேலும் சில பதக்கங்களை வெல்லும் என்ற கனவில் இந்தியர்கள் உள்ளனர்.