சினிமா
என் மேல யாரும் கோபப்படாதீங்க! – ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சினேகன் மனைவி…
சினேகன், நடிகை கன்னிகா ரவியை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த 29ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த திருமணத்தில் பாரதிராஜா உள்பட திரையுலகினர் பலரும் கலந்துகொண்டனர். இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.
சமுத்திரக்கனி நடித்த ’அடுத்த சாட்டை’ உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் கன்னிகா ரவி. கொரோனா வைரஸ் ஊரடங்கு விதியின்படி இந்த திருமணத்தில் திருமணத்தில் மிகக்குறைந்த நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஊரடங்கு முழுவதுமாக விலக்கப்பட்ட பின் சென்னையில் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்சி நடந்தது. இதில், சினிமா துறையினர் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், கன்னிகா ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது. வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிங்க. கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியல கோவம் வேண்டாம்’ என பதிவிட்டுள்ளார்.
என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது????♀️????♂️
முதல் புகைப்படம்???? 2014????
வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிங்க???? கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியல கோவம் வேண்டாம்????
அன்புடன்
கன்னிகா சினேகன் #kannikaravi pic.twitter.com/esGBc2wAls— கன்னிகா சினேகன் @Kannika snekan (@KannikaRavi) July 31, 2021