தமிழ்நாடு
இன்று முதல் சென்னை ரங்கநாதன் தெருவில் அங்கன்வாடிகள் செயல்பட அனுமதி இல்லை: மாநகராட்சி உத்தரவு!
இன்று முதல் சென்னை ரங்கநாதன் தெருவில் அங்கன்வாடிகள் செயல்பட அனுமதி இல்லை: மாநகராட்சி உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் கடந்த சில மாதங்களாக இறங்கு முகத்தில் இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திடீரென உயர்ந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து மாநில அரசு சென்னை மாநகராட்சி சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது
குறிப்பாக சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் ரங்கநாதன் தெரு உள்பட 9 இடங்களில் அங்கன்வாடிகள் இன்று முதல் செயல்பட அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பாதிப்பு மெல்ல உயர்ந்து வருவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெருநகர செண்டை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்கெட் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள 9 இடங்களில் அங்காடிகள் செயல்படநாளை முதல் அனுமதியில்லை. கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 09.08.2021 வரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி நீடிக்கப்படுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.
தற்பொழுது அண்டை மாநிலங்களிலும். மாநிலத்தின் சில பகுதிகளிலும். நோய் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைபடுத்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் காவல் துறை ஆணையாளர் ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பெருநகர சென்ணை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிஸ் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, ஆப. அவர்கள் பெருநகர சென்னை காவல் துறை ஆணையாளர் திருசங்கர் ஜிவால் இகாப, ஆகியோர் தலைமையில் ரிப்பன் கட்டட கூட்டரங்கில் ஒன்று (30.07.2021) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெருநகர சென்ணை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிஸ் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டண் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, பக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு. புலிபோன் பஜார். என்எஸ்.சி.போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, ராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை, அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.விகநகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிகவளாகங்கள் மற்றும் அங்காடிகள் நானை 31.07-2021 (சனிக் கிழமை) முதல் 09.08.2021 (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை செயல்பட அனுமதியி லை. மேலும், கொத்தவால் சாவடி மார்கெட் 01.08:2021 (ஞாயிற்று கிழமை) முதல் 09.06.2021 (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை செயல்பட ‘அனுமதியில்லை என வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வணிகர்கள் மேற்குறிப்பிட்ட அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை நடைமுறைபடுத்த மாநகராட்சி மற்றும் காவல் துறையின் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மேலும், பொதுமக்கள் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளின்படி பொதுஇடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாத தணிநபர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி மற்றும் காவல் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.