விளையாட்டு
‘தங்கப்பதக்கமே இலக்கு!’- ஒலிம்பிக்ஸ் அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனை
![Lovlina - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/Lovlina-1.jpg)
டோக்கியோ ஒலிம்பிகஸின் குத்துச் சண்டை விளையாட்டின் அரையிறுதிக்குள் நுழைந்து உள்ளார் 23 வயதான இந்திய குத்துச் சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன்.
அவர் அரையிறுத்திக்குள் நுழைந்திருப்பதன் மூலம் எப்படியும் இந்தியாவுக்கு இன்னொருப் பதக்கம் உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால், அதைப் பற்றி லோவ்லினா பெரிதாக சட்டை செய்வதாக தெரியவில்லை.
தன் காலிறுதி வெற்றிக்குப் பின்னர் பேசியுள்ள லோவ்லினா, ‘அரையிறுதிக்கு வந்துவிட்டேன் என்கிற காரணத்தினால் எனது இலக்கை நான் இத்தோடு நிறுத்திக் கொள்ள மாட்டேன்.
நான் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்று உள்ளது ஒரேயொரு பதக்கத்துக்குத் தான். அது தான் தங்கப் பதக்கம். அதை நான் கட்டாயம் வெல்வேன்’ என்று உறுதிபட தெரிவித்து உள்ளார்.
கடந்த 23 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக்ஸ் போட்டி பாதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை இந்த முறை ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா, ஒரேயொரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றுள்ளது.
மகளிர் பளு தூக்கும் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று கெத்துக் காட்டியுள்ளார். இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் அவரும் இந்தியாவுக்காக பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.