கிரிக்கெட்
இலங்கை சென்ற இந்திய வீரர்களில் மேலும் இருவருக்கு கொரோனா!
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணம் சென்றது என்பதும், முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்து நடைபெற்ற டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இலங்கை சென்ற இந்திய அணி வீரர்களில் ஒருவரான க்ருணால் பாண்ட்யாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 2வது டி20 போட்டி ஒருநாள் ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது நேற்று மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி முடிவடைந்த நிலையில் இன்று சாஹல் மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் ஆகிய இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
கொரோனா பாதிப்புக்கு உள்ளான க்ருணால் பாண்ட்யாவுடன் தொடர்பில் இருந்த எட்டு பேர்களுக்கு பரிசோதனை செய்ததில் சாஹல், கிருஷ்ணப்பா கவுதம் ஆகிய இருவருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது மூன்று இந்திய வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் ஒரு சில வாரங்களில் ஐபிஎல் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய வீரர்களுக்கு தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.