பிற விளையாட்டுகள்
வாழ்வா? சாவா? ஆட்டத்தில் மகளிர் ஹாக்கி அணி வெற்றி: ஒலிம்பிக்கில் இன்னொரு பதக்கமா?
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் இந்திய அணிகள் பல வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தற்போதைக்கு ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்தை இந்தியா பெற்றிருந்தாலும், இன்னும் ஒருசில பதக்கங்களை பெறும் வாய்ப்பு மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி, அயர்லாந்து அணியை அபாரமாக 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது. இதனை அடுத்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே கால் இறுதியை எட்டக்கூடிய வாழ்வா சாவா என்ற சூழ்நிலையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி இருந்தது. இந்த நிலையில் இந்த போட்டியில் 57 வது நிமிடத்தில் இந்தியாவின் நவ்னித் கவூர் அபாரமாக ஒரு கோல் அடித்தார். இதனை அடுத்து இரு அணி வீராங்கனைகளும் கோல் போடவில்லை என்பதால் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய மகளிர் ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி, தென் ஆப்பிரிக்க குடியரசு அணிக்கு எதிராக காலிறுதி ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க குடியரசு அணியை வீழ்த்தி விட்டால் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்தியாவின் தீபிகா குமாரி, பூஜா ராணி, பிவி சிந்து உள்ளிட்டோர் பதக்கம் பெற்று தரும் நிலையில் உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.