தமிழ்நாடு
சீக்கிரமே நகைக் கடன் தள்ளுபடி: தமிழக அரசு உறுதி
தமிழகத்தில் சீக்கிரமே நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார்.
இன்று சேலம் மாவட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியசாமி, ‘திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே நகைக் கடன் தள்ளுபடி கொடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது. அதன்படி கண்டிப்பாக நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ என்று தகவல் தெரிவித்து உள்ளார்.
நேற்று அதிமுக தரப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்புப் போராட்டம் மாநிலம் தழுவிய அளவில் நடந்தது. இந்தப் போராட்டத்தில் அதிமுகவினர், திமுக, தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
இப்படியான சூழலில் தான் நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறப்பட்டு உள்ளது.