தமிழ்நாடு
‘ஈபிஎஸ் – ஓபிஎஸ்.ஐ சசிகலா சந்திக்கலாம்!’- பிரேக்கிங் நியூஸ் சொன்ன மாஃபா பாண்டியராஜன்
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியை மீண்டும் கைப்பற்றுவேன் என்று வெளிப்படையாக தொடர்ந்து கருத்து கூறி வருகிறார்.
அதிமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்களும் இதனால் குஷியில் உள்ளார்கள். மேலும் கடந்த சில வாரங்களாக திமுக அரசு, அதிமுக அமைச்சர்கள் மீது தொடர்ந்து ரெய்டு நடத்தி வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால் கலக்கத்தில் உள்ள அதிமுக தலைமை, டெல்லி சென்று மோடி மற்றும் அமித்ஷாவை நேரில் பார்த்து உதவி கோரியுள்ளது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ‘சசிகலா, கட்சியில் மீண்டும் இணைவது குறித்தே பேசவில்லை. அவர் மீண்டும் மீண்டும் கட்சியை மீட்டெடுப்பேன் என்று சொல்கிறார். மீட்டெடுக்கும் நிலையில் கட்சி இல்லை. இரட்டைத் தலைமை மூலம் கட்சி மீள் உருவாக்கம் செய்யப்பட்டு சிறப்பாக வழிநடத்தப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் சசிகலா, மீண்டும் கட்சியில் இணைய விரும்பினால் அது குறித்து ஈபிஎஸ், ஓபிஎஸ்.ஐ சந்தித்து தன் தரப்பை விளக்கலாம்’ என்று கூறியுள்ளார். இத்தகவல் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.