தமிழ்நாடு
தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா: 3வது அலையில் இருந்து தப்பித்துவிடுமா?
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து தமிழகம் மூன்றாவது அலையில் இருந்து தப்பித்து விடும் என்று கருதப்படுகிறது. மேலும் தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,756
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,53,805
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 164
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 29
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 33,995
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 2,394
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 24,98,289
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,55,997
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 369,71,334