பிற விளையாட்டுகள்
காலிறுதியில் பூஜா ராணி, சுத்தி அடித்த தீபிகா குமாரி: இந்தியாவுக்கு கூடுதல் பதக்கங்களா?
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்திய வீரர்களில் ஒருசிலர் முதல் சுற்று, இரண்டாம் சுற்றுகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த சுற்றுகளிலும் வெற்றி பெற்று பதக்கத்தை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இன்று டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை பூஜா ராணி அல்ஜீரியா நாட்டின் வீராங்கனையை எதிர்த்து விளையாடினார்.
பூஜா ராணி 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் காலிறுதி மற்றும் அரையிறுதியில் வெற்றி பெற்றால் பதக்கம் கிடைப்பது உறுதி என்பது குறிப்பிடதக்கது
அதேபோல் மகளிர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். மகளிர் தனி நபர் இரண்டாவது சுற்றில் அவர் அமெரிக்காவின் மியூசினோவை 6-4 என்ற கணக்கில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
தீபிகா குமாரி மற்றும் பூஜா ராணி ஆகியோர் இந்தியாவுக்காக பதக்கங்களை பெற்று தருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கனவே பிவி சிந்து காலிறுதிக்கு முந்தைய போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது