Connect with us

தமிழ்நாடு

கையடக்க CPU கண்டுபிடித்த மாணவருக்கு தமிழக அரசு உதவி: நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்

Published

on

திருவாரூரைச் சேர்ந்த மாதவ் என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் கையடக்க கம்ப்யூட்டர் CPU உருவாக்கியது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவர் கையடக்க CPU உற்பத்தி செய்து ஆன்லைன் மூலம் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாகவும் அரசு உதவி செய்தால் இதை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து மிகப்பெரிய அளவில் அனைவருக்கும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து கேள்விப்பட்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மாணவர் மாதவை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் அவரது உயர் படிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் தமிழக அரசு உதவும் என்றும் அறிவித்துள்ளார்.

டெராபைட் இந்தியா என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கும் மாணவர் மாதவ் நம்முடைய மாநிலத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்களை இன்று (28.7.2021) தலைமைச்‌ செயலகத்தில்‌, திருவாரூர்‌ மாவட்டம்‌, பழவனக்குடி கிராமத்தைச்‌ சேர்ந்த செல்வன்‌ எஸ்‌.எஸ்‌. மாதவ்‌ அவர்கள்‌ சந்தித்து, தான்‌ புதிதாக உருவாக்கிய கையடக்க கணினி மையச்‌ செயலாக்கக்‌ கருவியைக்‌ (ப) காண்பித்து வாழ்த்து பெற்றார்‌.

திருவாரூர்‌ மாவட்டம்‌, பழவனக்குடி கிராமம்‌, கலைஞர்‌ நகரில்‌ வசித்து வரும்‌ திரு. சேதுராசன்‌ என்பவரின்‌ மகன்‌ செல்வன்‌ எஸ்‌.எஸ்‌. மாதவ்‌, ஒன்பதாம்‌ வகுப்பு பயின்று வருகிறார்‌. இவர்‌ கணினியில்‌ மிகுந்த ஆர்வம்‌ கொண்டு, கணினி மொழிகளை படித்துள்ளார்‌. இவர்‌ கொரோனா ஊரடங்கு காலத்தில்‌ பள்ளிகள்‌ திறக்கப்படாத நிலையில்‌ கையடக்க CPU கண்டுபிடித்து உள்ளதாகவும்‌, இதற்காக இரண்டு ஆண்டுகளாகக்‌ கடுமையாக முயற்சித்து இம்முயற்சியில்‌ வெற்றி பெற்றுள்ளார்‌ என்பதைக்‌ கேள்விப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, செல்வன்‌ எஸ்‌.எஸ்‌. மாதவ்‌-யை நேரில்‌ அழைத்துப்‌ பாராட்டினார்‌. இக்கருவி அனைவரிடத்திலும்‌ சென்றடைய ஏதுவாக டெராபைட் இந்தியா என்ற நிறுவனத்தினைத்‌ தொடங்கி, இணையதளம்‌ மூலமாக மிகவும்‌ குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார்‌ என்ற தகவலைக்‌ கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அம்மாணவனை வாழ்த்தினார்‌.

செல்வன்‌ எஸ்‌.எஸ்‌. மாதவ்‌ அவர்களின்‌ கண்டுபிடிப்பினைப்‌ பாராட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, கணினி தொடர்பான அவரது உயர்படிப்பிற்கும்‌, ஆராய்ச்சிக்கும்‌ தமிழ்நாடு அரசு அனைத்து விதமான உதவிகளையும்‌ செய்யும்‌ என்று உறுதியளித்தார்‌.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

author avatar
seithichurul
சினிமா45 நிமிடங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்57 நிமிடங்கள் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்1 மணி நேரம் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு24 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா24 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு24 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!