தமிழ்நாடு
“அண்ணே, அண்ணே… ஸ்டாலின் அண்ணே…”- பாட்டுபாடி போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயக்குமார்
தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்து வரும் திமுக-வுக்கு எதிரான எதிர்க்கட்சியான அதிமுக, இன்று மாநிலம் தழுவிய அளவில் பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறது.
திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி கவன ஈர்ப்புப் போராட்டத்தை அதிமுக நடத்தி வருகிறது. பல்வேறு இடங்களில் நடக்கும் இந்தப் போராட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் நடந்த போராட்டக் கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். அப்போது அவர், ‘அண்ணே, அண்ணே… ஸ்டாலின் அண்ணே. நம்ப ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டுப் போச்சு அண்ணே’ என்று பாட்டுப் பாட கூட இருந்த அதிமுக தொண்டர்களும் பதில் பாட்டு பாடினார்கள்.
#திமுக விற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அதிமுக அமைச்சர் @offiofDJ விமர்சன பாடல்…#அண்ணேஅண்ணேஸ்டாலின்அண்ணே@mkstalin #dmk #AdmkProtest @Jayachandran_DJ @PrakashPandianP @Harish_Journo @MahiCraj pic.twitter.com/99ROooZ7P6
— Ival Powniya NK (@Powniya1) July 28, 2021
முதலமைச்சர் ஸ்டாலினை கிண்டல் செய்து ஜெயக்குமார் பாடியது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து உள்ளது.