இந்தியா
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!..ரயிலில் இப்படியும் ஏறலாம்!… அதிர்ச்சி கொடுத்த பெண்மணி (வீடியோ)….
இந்தியாவில் அதிகமானோர் ரயிலில்தான் பயணம் செய்கின்றனர். பேருந்தை விட ரயிலில் செல்வது சவுகர்யமாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். அதேபோல், ரயிலில் இடம் பிடிப்பது ஒன்றும் சாதாரண விஷயமில்லை. ரயில் கிளம்புரம் நேரத்திற்கு சில மணி நேரம் முன்பே சென்று இடம் பிடிக்க வேண்டும். கூட்டம் சேர்ந்து விட்டால் உட்கார இடம் கிடைக்காது. அதன்பின் நின்று கொண்டுதான் பயணிக்க வேண்டும்.
இந்நிலையில், ஒரு பெண் ரயிலில் Emergerncy window எனப்படும் அவரசக்கால ஜன்னல் வழியாக ரயிலில் ஏறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உள்ளே அமர்ந்திருப்பவரின் அப்பெண்மணி பேசிக்கொண்டிருக்கிறார். திடிரென அவர் அந்த ஜன்னல் வழியாக அவர் உள்ளே செல்கிறார். இத்தனைக்கும் அந்த பெண் புடவை அணிந்திருக்கிறார்.
இந்த வீடியோவை இதுவரை 60 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். அதில் 47 ஆயிரம் பேர் இந்த வீடியோவுக்கு லைக் செய்துள்ளனர். சிலர் அப்பெண்ணை திட்டி தீர்த்தும் வருகின்றனர்.
View this post on Instagram