வணிகம்
பேஸ்புக், வாட்ஸ்ஆப்-ஐ தடை செய்வது எப்படி? டெலிகாம் துறையிடம் ஆலோசனை கேட்ட அரசு!
இந்தியாவில் வாட்ஸ்ஆப், பேஸ்புக் மற்றும் பிற சமுக வலைத்தளங்களின் பயன்பாட்டினை தடை செய்வது எப்படி என்று மத்திய அரசு டெலிகாம் துறையிடம் ஆலோசனை கேட்டுள்ளது.
மத்திய அரசு ஐடி சட்டப் பிரிவு 69ஏ கீழ் பேஸ்புக், வாட்ஸ்ஆப் செயலிகளை இந்தியாவில் பயன்படுத்துவதில் இருந்து தடை செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்ஆப்பில் வேகமாகப் போலியான செய்திகள் பரவுவதற்கு எதிராக எச்சரிக்கையினை விடுத்ததினை அடுத்துத் தடை செய்வது குறித்து ஆலோசனை செய்து வருவது பெறும் சர்ச்சையினை ஏற்படுத்தி வருகிறது.