சினிமா
கார் விபத்தில் இறந்து போன யாஷிகாவின் தோழி இவர்தான்….
மாமல்லபுரம் அருகே நேற்று அதிகாலை நடிகை யாஷிகா, தனது தோழி பவானி மற்றும் 2 ஆண் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அவர் சென்ற கார் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முதல் கட்ட விசாரணையில் நடிகை யாஷிகா தான் காரை ஓட்டி வந்ததாகவும் அவர் அதிவேகமாக காரை ஓட்டியது தான் விபத்திற்கு காரணம் என்றும் தெரியவந்தது. இதனை அடுத்து யாஷிகாவின் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அவரின் ஓட்டுனர் உரிமத்தை மாமல்லபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடத்தப்பட இருப்பதாகவும், யாஷிகா உடன் வந்த இரண்டு ஆண் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில், கார் விபத்தில் பலியான யாஷிகா ஆனந்தின் தோழி பவானியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். 5 நாட்களுக்கு முன்புதான் அவர் சென்னை வந்துள்ளார். தற்போது விபத்தில் அவர் மரணமடைந்துவிட்டார்.