தமிழ்நாடு
டெல்லி விரைகிறார் ஈபிஎஸ்: நாளை பிரதமரை ஓபிஎஸ்-ஈபிஎஸ் சந்திப்பதாக தகவல்!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை டெல்லி சென்றார் என்பதும் அவர் இன்று மாலை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இன்று மாலை டெல்லி செல்ல இருப்பதாகவும், ஓபிஎஸ் – ஈபிஎஸ் இணைந்து நாளை மாலை பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இன்று மாலை கோவை விமான நிலையத்தில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்லும் விமானத்தில் செல்ல இருப்பதாகவும், அவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர்களும் டெல்லி செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் திடீரென டெல்லிக்கு செல்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை திமுக அரசு கூறிவரும் நிலையில் ஓபிஎஸ் ஈபிஎஸ் டெல்லி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக அரசுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது வேறு என்ன காரணத்திற்காக அதிமுக பிரமுகர்கள் டெல்லி சென்று உள்ளார்கள் என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக வட்டாரத்தில் மட்டுமின்றி திமுக வட்டாரத்திலும் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இன் டெல்லி பயணம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.