தமிழ்நாடு
சாலை விபத்தில் யாஷிகா ஆனந்த் படுகாயம்: உடன் சென்ற தோழி உயிரிழப்பு!
நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் சென்ற கார் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து அவர் படுகாயம் அடைந்ததாகவும் அவருடன் சென்ற தோழி ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது
நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவில் தோழிகளுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் அவர் சென்ற கார் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார்
யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. படுகாயங்களுடன் இருந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.