சினிமா
கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட உள்ள நயன்தாரா!
![Nayanthara 3 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/Nayanthara-3.jpg)
நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகைகளிலேயே அதிக சம்பளமாக 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் நயன்தாரா. தற்போது நயன்தாரா தன்னை மையமாக வைத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.
ஏற்கனவே அவர் நடித்த இது மாதிரியான திரைப்படங்கள் நல்ல வசூலையும், வரவேற்பையும் பெற்றது. குறிப்பாக நயன்தாரா நடித்த அறம் படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. நல்ல வசூல் சாதனையை குவித்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் அறம் 2 என்ற பெயரில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
முதல் பாகத்தை இயக்கிய கோபி நயினார் தான் இந்த படத்தையும் இயக்க உள்ளதாகவும், இதில் நயன்தாரா அரசியலில் ஈடுபடுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் இயக்க கட்சி ஒன்றை தொடங்கி மக்களுக்காக போராடி அவர் ஆட்சிக்கு வருவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.