Connect with us

தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ். தலைவர் வருகைக்காக சுற்றறிக்கை: மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பணியில் இருந்து விடுவிப்பு!

Published

on

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத் அவர்களின் மதுரை வருகைக்காக மதுரையை சுத்தப்படுத்த வேண்டும் என மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையர் நேற்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த சுற்றறிக்கையில் கூறியிருந்ததாவது: மதுரை விமான நிலையத்தில் இருந்து அவர் கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் உள்ள வழித்தடத்தில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தெரு விளக்குகளை பராமரிக்க வேண்டும் என்றும் சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டுமென்றும் அவர் பயணம் செய்யும் நேரங்களில் சாலைகளில் மாநகராட்சி பணிகளான சீரமைப்பு பணிகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வருகையை ஒட்டி சுற்றறிக்கையை வெளியிட்ட மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளரை மதுரை மாநகராட்சி பணியிலிருந்து விடுவித்து ஆணையிடப்படுகிறது என்று மதுரை மாநகராட்சி ஆணையாளர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில் இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் பிரமுகர்கள் பயணம் செய்யும்போது அது தொடர்பான விதிகளின்படி பாதுகாப்பு காரணங்களுக்காக வழக்கமாக சில முன்னேற்பாடுகள் செய்யப்படும். அதன் அடிப்படையில் மட்டுமே விதிமுறைகளின்படி பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. சிறப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. வழக்கமான நிர்வாக நடைமுறைகளின் படி உயர் அலுவலர்கள் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக தவறுதலாகப் புரிந்து கொள்ளப்படும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலரிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்படும்’ என்று மதுரை மாநகராட்சி ஆணையர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆர்எஸ் தலைவரின் வருகைக்காக சிறப்பு சுற்றறிக்கையை வெளியிட்டதை அடுத்து இது திமுக ஆட்சி தானா? என்ற கேள்வி எழுப்பிய பலர் தற்போது இந்த நடவடிக்கைக்கு பின் திமுக ஆட்சிதான் என்று கூறி வருகின்றனர்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா18 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்18 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!