சினிமா
ரொம்ப நாளா மிஸ் ஆகிடுச்சு!… பாலிவுட் ஹீரோயினுக்கு ஆசைப்படும் ரஜினி…..
அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் ரஜினி நடிக்கும் புதிய படம் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்களிடம் எழுந்துவிட்டது. அனேகமாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனரும், ரஜினியின் தீவிர ரசிகருமான தேசிங்கு பெரியசாமி ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவார் என பேச்சு அடிபடுகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் தனக்கு ஜோடியாக பாலிவுட் கதாநாயகி தீபிகா படுகோனே நடித்தால் நன்றாக இருக்கும் என ரஜினி ஆசைப்படுகிறாராம். அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. ரஜினியின் அனிமேஷன் திரைப்படமான கோச்சடையான் திரைப்படத்தில் தீபிகா படுகோனே நடித்தார். 2 நாட்கள் நடித்து கொடுத்தாலும் கிராபிக்ஸில் அவர் படம் முழுக்க வருவார்.
அதேபோல், ரஜினி நடிக்க துவங்கிய ‘ராணா’ படத்திலும் தீபிகா படுகோனே-தான் கதாநாயகி. ஆனால், ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அப்படம் நின்று போனது. எனவேதான், இந்த முறை தீபிகா படுகோனே நடிக்க வேண்டும் என ரஜினி ஆசைப்படுகிறாராம். எனவே, அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது துவங்கியுள்ளது.