தமிழ்நாடு
கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும்- கட்சி பேதமின்றி தமிழக எம்.பி-க்கள் கோரிக்கை!
தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் என இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கட்சிப் பேதமின்றி அனைத்துத் தமிழக எம்.பி-க்களும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்தனர்.
நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. காலையிலிருந்து மதியம் வரையிலும் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பமாகவே இருந்ததால் அவை நடைபெறவில்லை. மாலை நடந்த கூட்டத்தில் தமிழக எம்.பி-க்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாற்போல் கட்சி பேதம் இன்றி தமிழகத்துக்காக கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்தனர்.
திமுக எம்.பி திருச்சி சிவா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக எம்பி தம்பிதுரை, ஜிகே வாசன் ஆகியோர் கூடுதல் தடுப்பூசிகள், செங்கல்பட்டு தொழிற்சாலையில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான அனுமதி ஆகியவற்றுக்கான கோரிக்கையை வைத்தனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றில் தமிழக எம்.பி-க்கள் தடுப்பூசிக்கான கோரிக்கை குறித்துப் பேசினர்.
மற்ற மாநிலங்களைச் சேர்ந்த எதிர்கட்சிகளின் எம்.பி-க்கள் பலரும் மத்திய அரசு கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கத் தவறிவிட்டதாக குற்றம் சுமத்தினர்.