தமிழ்நாடு
மதுரையில் அழகிரி ஆதரவாளர் வெட்டிப்படுகொலை!
![Alagiri 6 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/Alagiri-6.jpg)
மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரும், மதுரை பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவருமான மதுரை வீரன் இன்று அதிகாலையில் அவரது வீட்டின் அருகில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மதுரை வீரனின் மகளுக்கு மு.க.அழகிரி தலைமையில் தான் திருமணம் நடைபெற்றது. இதில் வாழ்த்தி பேசிய அழகிரி, மதுரை வீரன் போன்ற வீரர்கள் என்னுடன் இருக்கும்போது என்னை யாரும் அசைக்க முடியாது என கூறினார். ஆனால் தற்போது மதுரை வீரன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது அழகிரி ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வீரன் கொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். முன் விரோதமா? அல்லது பெண் தொடர்பா? போன்ற கோணங்களில் இந்த விசாரணை நடந்து வருகிறது.