கிரிக்கெட்
இலங்கையில் கெத்து காட்டிய இந்திய அணி… புதிய சாதனை படைத்த தவான்!
![ind sl match - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/ind-sl-match.jpg)
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரின் ‘இரண்டாம் தர’ இந்தியக் கிரிக்கெட் அணி என்ற விமர்சனத்தை துவம்சம் செய்யும் வகையில் இந்திய அணி இலங்கை மண்ணில் கெத்து காட்டியுள்ளது.
இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக சென்றுள்ளது. இதில் ஒரு நாள் போட்டிக்காக ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி அனுப்பப்பட்டுள்ளது. விராட் கோலி, அஸ்வின், ரோகித் சர்மா போன்ற வீரர்கள் செல்லவில்லை. இதனால், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான அர்ஜுனா ரணதுங்கா, ‘இந்தியா இரண்டாம் தர அணியை அனுப்பியுள்ளது’ என விமர்சித்து இருந்தார்.
இதற்கு ட்விட்டரில் இந்திய ரசிகர்கள் கடுமையாகக் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் இந்திய அணி அபாரமாக ஆடி இலங்கையை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் 263 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கை பந்துவீச்சாளர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் திணறடித்துவிட்டனர். கடைசி வரை ஆட்டம் இழக்காமல் தொடக்க வீரரான ஷிகர் தவான் இந்திய அணியில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 5-ம் பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையைப் படைத்தார்.