இந்தியா
உணவுப்பட்டியலில் இருந்து நீக்கப்படும் கோழிக்கறி: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
தமிழகம் உள்பட தென்னிந்திய மக்களுக்கு சிக்கன் உணவு என்றால் உயிர் என்பதும், அந்த அளவுக்கு கோழி கறி உணவு பொதுமக்கள் மத்தியில் விருப்பத்திற்கு உரிய உணவாக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கேரளாவில் கோழிக்கறியை உணவு பட்டியலில் இருந்து நீக்க அங்கு உள்ள ஓட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் சமீபத்தில் இரு மடங்காக உயர்ந்த கோழிக்கறியின் விலை தான் என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த மாதம் ஒரு கிலோ கோழி 86 ரூபாயாக விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்து ஒரு கிலோ 150 ரூபாய் என விற்பனை ஆகி வருகிறது. இதனால் கோழிக்கறி விலையை அதிகப்படுத்தி விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் கோழிக்கறியை அதிக விலைகொடுத்து வாங்க மறுக்கின்றனர்
இதனால் உணவு பட்டியலில் இருந்தே கோழிக்கறியை நீக்கம் ஓட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கோழிக்கறி விலை உயர்வு காரணமாக லாபம் கிடைப்பதில்லை என்றும் பணியாளர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலைமை ஏற்படுகிறது என்றும் உரிமையாளர்கள் கூறுகின்றனர்
இந்த நிலையில் கோழிக்கறி விலையை குறைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோழிகள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.