கிரிக்கெட்
ஷிகர் தவான் அபார ஆட்டம்: 36 ஓவரில் வெற்றியை பறித்த இந்திய அணி!
![dhawan a - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/dhawan-a.jpg)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் அபார ஆட்டம் காரணமாக 36.4 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கனியை பறித்தது
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 263 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 24 பந்துகளில் 43 ரன்கள் அடித்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். அதன்பின் கேப்டன் ஷிகர் தவான் 86 ரன்களும், இஷான் கிஷான் 59 ரன்களும் எடுத்ததால் இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 263 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக பிரித்திவ் ஷா தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் ஜூலை 20-ஆம் தேதி அதாவது நாளை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
ஸ்கோர் விபரம்:
இலங்கை: 262/9 50 ஓவர்கள்
சாமிகா கருணரத்னே: 43
தசன் ஷனகா: 39
சாரித் அஸ்லாங்கா: 38
இந்தியா: 263/3 36.4 ஓவர்கள்
ஷிகர் தவான்: 86
இஷான் க்ஷான்: 59
பிரித்திவ் ஷா: 43