இந்தியா
வடகிழக்கில் வேகமெடுக்கும் கொரோனா: கடும் கட்டுப்பாடுகள் அமல்!
![lockdown.jpg 0 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/lockdown.jpg-0.jpeg)
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து டெல்டா வகை கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து அங்குள்ள மாநிலங்கள் டெல்டா கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய லாக்டவுன் விதிமுறைகளை அமல் செய்துள்ளது.
குறிப்பாக அதிக டெல்டா பாதிப்பு பதிவு செய்யப்பட்டு வரும் மணிப்பூர் மாநிலத்தில் 10 நாள் கடும் கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு அமல் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல மிசோரம் மாநிலம் வரும் 24 ஆம் தேதி வரை அதிக கட்டுப்பாடுகள் கொண்ட லாக்டவுன் உத்தரவுக்குச் செல்ல உள்ளது.
மேலும் திரிப்புரா மாநிலம் வார இறுதி கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தி உள்ளது. சிக்கிமில் பொது நிகழ்ச்சிகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளன.
அசாம் மாநிலம் முன்னதாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குப் பல்வேறு தளர்வுகளை அறிவித்து இருந்தது. தற்போது கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தளர்வுகளைத் திரும்பப் பெற்றுள்ளது. மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிப்புரா மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதாக அரசுத் தரப்பு தகவல் அளித்துள்ளது.