Connect with us

தமிழ்நாடு

தி நகர் ரெங்கநாதன் தெருவில் அதிக கெடுபிடி: ஷாப்பிங் செல்வோர் கவனத்திற்கு!

Published

on

சென்னையில் உள்ள தி நகர் ரங்கநாதன் தெருவில் வாரந்தோறும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதும் குறிப்பாக சனி, ஞாயிறு கிழமைகளில் மிக அதிகமான கூட்டம் இருக்கும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மிக அதிகமாக மக்கள் கூடும் இடத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதனால் இன்றும் நாளையும் தி நகர் ரங்கநாதன் தெருவுக்கு ஷாப்பிங் செல்வோர் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

சனி, ஞாயிறு கிழமைகளில் தி நகர் ரங்கநாதன் தெருவில் அதிக கூட்டம் கூடுகிறது என்றும், 50 சதவீதத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கடை உரிமையாளர்கள் அனுமதிப்பதாகவும் புகார் வந்துள்ளது. இதனையடுத்து இன்று மாநகராட்சி அதிகாரிகள் தி நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பெரும் வணிக வளாகங்களிலும் சிறிய கடைகளிலும் மக்கள் கூட்டம் 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதா என்பதை சென்னை மாநகராட்சி ஆணையர், வட்டார துணை ஆணையர் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்

50% க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வியாபாரிகளை அவர்கள் எச்சரித்து வருகின்றனர். மேலும் வியாபாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளையும் அதிகாரிகள் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றும் நாளையும் தி நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைக்கு செல்லும் பொதுமக்கள் ஒரு சில விஷயத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது

மாலை 3 மணிக்கு மேல் அதிக கூட்டம் இருந்தால் ரங்கநாதன் தெருவுக்கு வரும் பொதுமக்கள் வழியிலேயே நிறுத்தப்படுவார்கள் என்றும் வேறு இடங்களுக்கு செல்லுமாறு அனுப்பப்படுவார்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது

எனவே இந்த பகுதிக்கு ஷாப்பிங் செய்ய வருபவர்கள் முன்கூட்டியே கூட்டம் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் பிளாட்பாரத்தில் கடைகள் போடக் கூடாது என்றும் காவல்துறையினர் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா56 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!