தமிழ்நாடு
தேர்தல் தேதி அறிவிப்பு: உள்ளாட்சி தேர்தல் திருவிழா ஆரம்பம்
தமிழகத்தில் உள்ளாட்சி நடைபெறாத பகுதிகளில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது என்பது தெரிந்ததே
இதனை அடுத்து தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு உண்டான சூழ்நிலைகளை ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளியானது
இந்த நிலையில் ஏற்கனவே ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது வந்துள்ள தகவலின் படி தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் கே என் நேரு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்
அதேபோல் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து மிக விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற பகுதிகளில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் தேர்தல் திருவிழா ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலுக்கு ஏற்கனவே திமுக, அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தயார் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.