உலகம்
கடையில் தீ வைத்த கொள்ளையர்கள்…குழந்தையை தூக்கி எறிந்த தாய்.. அதிர்ச்சி வீடியோ…
தென் ஆப்பிரிக்கா நாட்டில் கொள்ளை சம்பவம் அடிக்கடி நடப்பதுண்டு. அதுவும் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்துவிட்டு கடையையே கொளுத்திவிட்டு சென்றுவிடுவார்கள். காவல்துறையினர் எவ்வளவு கெடுபிடியாக நடந்தாலும் அங்கு குற்றங்கள் மற்றும் குறைவதே இல்லை.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உள்ள தர்பான் சிட்டியில் சமீபத்தில் மக்கள் போராட்டம் நடத்திய போது கலவரம் ஏற்பட்டது. அப்போது ஒரு கடையில் கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடித்தனர். அதோடு, அந்த கடைக்கு தீ வைத்துவிட்டனர். அப்போது 16வது மாடியில் தனது 2 வயது குழந்தையுடன் இருந்த ஒரு பெண், கீழே முதல் தளத்திற்கு வந்தார். அடித்தளத்தில் தீ அதிகமாக எரிந்ததால் கீழே இறங்கி வரமுடியவில்லை.
எனவே, முதல் தளத்தில் இருந்து தனது குழந்தையை தூக்கி கீழே போட்டார். அப்போது அங்கே நின்றிருந்த மக்கள் அந்த குழந்தையை பத்திரமாக பிடித்து காப்பாற்றினர். அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தைக்கும், அப்பெண்ணும் எதுவும் ஆகவில்லை. இதை அங்கிருந்து ஒரு பத்திரிக்கையாளர் வீடியோ எடுத்து தன் டிவிட்டரில் பகிர இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
[WATCH] Toddler rescued from a fire. Looters started a fire after stealing everything from the shops on the ground floor. They then set fire to the building, affecting apartments upstairs. Neighbours caught the little girl ????#ShutdownKZN watch @BBCWorld for more pic.twitter.com/LTMTAa7WAz
— Nomsa Maseko (@nomsa_maseko) July 13, 2021