Connect with us

தமிழ்நாடு

செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்.. அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!

Published

on

செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தமிழ்நாட்டில் மீதமுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 3 ஆண்டுகள் கழித்து 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களுக்கு நடைபெற்றது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்த 9 மாவட்டங்களிலும் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடத்தப்படாமல் இருந்ததால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. முன்னதாக இந்த பகுதிகளில் தேர்தல் நடத்த 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

இப்போது இந்த 6 மாத அவகாசம் ஜூன் 4-ந் தேதி நிறைவடைந்தது. ஆனால், மீண்டும் 6 மாத அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் புதிய இடைக்கால மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய கோடைக்கால சிறப்பு அமர்வு முன் அன்மையில் விசாரணைக்கு வந்தது.

மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டியவற்றுக்கான பதவிக்காலம் எப்போது நிறைவடைந்தது என்று கேட்டனர். அதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.நரசிம்மா ஆஜராகி, ‘தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சராசரியாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதாலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மேற்குவங்க தேர்தலுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாலும், எஞ்சியுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தலை நடத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதல்கட்டமாகப் பரிசோதிக்க இயலவில்லை. இதற்குக் குறைந்தபட்சம் 35 நாட்கள் தேவைப்படுகிறது’ என வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள், ‘எல்லா விவகாரங்களிலும் சாக்குப்போக்கு சொல்ல, கொரோனா நல்ல ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. 6 மாதம் அவகாசம் அளிக்க முடியாது. எஞ்சியுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3-வது அலைக்கு முன் ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.

இந்நிலையில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் மீதமுள்ள பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் உரியநேரத்தில் தேர்தலை நடத்தவில்லை என அமைச்சர் பெரியகருப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகி, செப்டம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா3 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!