தமிழ்நாடு
மீண்டும் ஊரடங்கா? முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்த நிலையில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும் அதன் பின்னர் தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து தமிழக அரசும் படிப்படியாக தளர்வுகள் அறிவித்தது என்பதும் தெரிந்ததே.
தற்போது பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் தவிர கிட்டத்தட்ட அனைத்துமே நிபந்தனைகளுடன் இயங்கி வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் திங்கட்கிழமை உடன் முடிவடைவதை அடுத்து மீண்டும் ஊரடங்கு பிறப்பிப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அதன்பின் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வருமா? திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தில் இருப்பதால் அவர்களுக்கு சாதகமாக அறிவிப்புகள வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அதேபோல் நீச்சல் குளங்கள், பார்கள் உள்ளிட்டவைகள் இன்னும் திறக்கப்படாமல் இருப்பதால் அது குறித்த அறிவிப்புகள் வருமா? கோவை உள்பட ஒரு சில மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு வருமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.