இந்தியா
கேரளா, மகாராஷ்டிராவில் மீண்டும் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா!
இந்திய அளவில் மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்களில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று மீண்டும் கட்டுக் கடங்காமல் பரவி வருகிறது.
இதுவரை இரண்டு மாநிலங்களிலும் இரண்டு கொரோனா அலைகளும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், மீண்டும் ஒரு கொரோனா அலை பரவத் தொடங்கி விட்டதோ என்று அஞ்சப்படுகிறது.
தற்போது இந்த இரு மாநிலங்களிலும் பரவி வரும் கொரோனா தொற்றானது மிக விரைவில் தன்னை மறு உருவாக்கம் செய்து வருவது மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஞாயிற்றுக் கிழமையான நேற்று மகாராஷ்டிராவில் 8,535 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதே போல கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12,220 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
இந்த இரு மாநிலங்களிலும் கடந்த ஒரு வார காலமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. கடந்த வாரம் எய்ம்ஸ் தரப்பு, இந்தியாவில் 6 முதல் 8 வாரங்களுக்குள் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவும் என்று எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.