தமிழ்நாடு
கொரோனாவுக்கு நாசி வழி தடுப்பூசி: எலிகள் சோதனையில் வெற்றி!
கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக ஏற்கனவே மருத்துவர்கள் விஞ்ஞானிகள் பல தடுப்பூசிகளை கண்டுபிடித்து இருக்கும் நிலையில் தற்போது நாசி வழியே செலுத்தும் தடுப்பூசியை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
கொரோனா வைரஸ்க்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழகம் நாசி வழி செலுத்தும் தடுப்பூசியை ஆராய்ச்சி செய்து வரும் நிலையில் தற்போது எலிகளிடம் சோதனை செய்ததில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜியா பல்கலைக்கழகம் கடந்த சில மாதங்களாக நாசி வழி தடுப்பூசி சோதனை செய்து வந்த நிலையில் எலிகள் மற்றும் சிறு விலங்குகளுக்கு சமீபத்தில் இந்த தடுப்பு ஊசியை செலுத்தி ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் எலிகளுக்கு நாசி வழி தடுப்பூசி செலுத்தப்பட்டதில் அந்த தடுப்பூசி நன்றாக வேலை செய்வதாகவும் மற்ற எலிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்த சோதனை வெற்றி என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த தடுப்பூசியை நாசி வழியாக செலுத்துவது மிகவும் எளிது என்றும் நம் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் மூன்று மாதங்கள் வரை வைத்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் அதுமட்டுமின்றி இந்த தடுப்பூசியை ஒரே ஒரு டோஸ் போட்டால் கொரோனாவிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மிக விரைவில் இந்த தடுப்பூசி மனிதர்களுக்கும் சோதனை செய்யப்பட்டு அதன் பின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. மூக்கின் வழியே தான் கொரோனா வைரஸ்கள் மூச்சு சூழலுக்கு செல்லும் என்பதால் அது செல்லும் வழியிலேயே இந்த தடுப்பு ஊசி செலுத்தி விட்டால் வைரசுக்கு எதிரான தடுப்பாற்றல் அதிகரிக்கும் என்றும் ஜார்ஜியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.