செய்திகள்
ஒரு படிக்கட்டுக்கு ஒரு கட்டு பணம்!.. இப்படி ஒரு மாமியாரா?!… கொடுத்து வச்ச மருமகள்தான்..(வீடியோ)….
![wedding - Bhoomitoday wedding](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/wedding.jpg)
பொதுவாக பெரும்பலான இடங்களில் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே சுமூகமான உறவு இருப்பதில்லை. இவ்வளவு நாள் என் பேச்சை கேட்ட மகன் தற்போது பொண்டாட்டி பேச்சை கேட்கிறான் என கருதும் அம்மா, இவ்வளவு நாள் அம்மா இருந்தாங்க.. இப்பா நான் வந்த பின்பும் எதற்கெடுத்தாலும் அம்மாவா? என நினைக்கும் மனைவியிடமும் இடையில் மாட்டிக்கொண்டு ஆண்கள் சந்திக்கும் மன உளைச்சல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல…
இது ஒருபுறம் எனில், மாமியார், மருமகள் சண்டை என்பது அது வேற லெவல்.. இதனால் பல கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாக மாறிவிட்டது. இப்போதெல்லாம் கூட்டு குடும்பத்தை பார்ப்பதே அரிதாக மாறிவிட்டது. அதிலும், மருமகளை மகள் போல் நடத்தும் மாமியாரும், மாமியாரை அம்மாவை போல் கருதும் மருமகளும் அமைவது அவரவர்கள் செய்த பாக்கியம்.
இந்நிலையில், புதிதாக திருமணமாகி முதன் முதலாக வீட்டிற்கு வரும் மருமகளை ஒரு மாமியார் கை நிறைய பணக்கட்டுடன் வரவேற்கும் வீடியோ வெளியாகியுள்ளது. வீட்டிற்கு வாழ வரும் மருமகள் வீட்டில் உள்ள படிக்கெட்டில் ஒவ்வொரு அடி வைக்கும் போதும் அவர் கையில் மாமியார் ஒரு கட்டு பணத்தை கொடுக்கிறார். பணத்தோடு தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும் அவர் தருகிறார். மேலும், மருமகள் தலை மீதும் பூவும் துவப்படுகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியானதும் பலரும் பார்த்து வயித்தெரிச்சல் அடைந்து, ‘சூப்பர் கொடுத்து வச்ச மருமகள்தான்’.. என பதிவிட்டு வருகின்றனர்.