தமிழ்நாடு
OTT தளங்களை அரசு கேபிள் டிவி மூலம் ஒளிபரப்பு நடவடிக்கை
ஓடிடி தளங்களை அரசு கேபிள் டிவி மூலம் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிஞ்சி என்.சிவக்குமார் தகவல் தெரிவித்து உள்ளார்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அவர் தலைவராக சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அவர், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்துக்குச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில் குறிஞ்சி என். சிவக்குமார் கூறியதாவது:-
ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் காரணத்தினால், அதை அனைத்து இடங்களுக்கும் அதைக் கொண்டு செல்ல திறம்பட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அதைப் போலவே ஓடிடி தளங்களை அரசு கேபிள் டிவி மூலம் ஒளிபரப்ப உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறைந்த விலையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிறைவான கேபிள் டிவி வசதியை அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் செய்து தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.