சினிமா செய்திகள்
தனுஷின் ‘நானே வருவேன்’ டைட்டில் மாற்றமா? செல்வராகவனின் திடீர் முடிவு
![selvaragavan - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/selvaragavan.jpg)
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திற்கு ’நானே வருவேன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும், அந்த டைட்டில் ப்ரோமோஷன் செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே. கலைபுலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது திடீரென ’நானே வருவேன்’ என்ற படத்தின் டைட்டில் மாற்றம் செய்ய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. ’நானே வருவேன்’ என்ற டைட்டிலில் ஏற்கனவே ஸ்ரீபிரியா இயக்கிய ஒரு திரைப்படம் கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் கமல் ஸ்ரீபிரியா நடித்த ’நீயா’ படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’நானே வருவேன்’ டைட்டில் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று இயக்குனர் செல்வராகவன், தனுஷ் நடிக்கும் அடுத்த படத்திற்காக தேர்வு செய்திருந்தார். இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் இந்த டைட்டில் தற்போது ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது இந்த டைட்டிலை மாற்ற படக்குழுவினர் செய்திருப்பதாக கூறப்படுகிறது. டைட்டில் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை படக்குழுவினர் தெரிவிக்க மறுத்துவிட்டாலும், ஸ்ரீப்ரியாவிடமிருந்து இந்த டைட்டிலை பெற அதிகாரபூர்வ அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய டைட்டில் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தனுஷ் 42’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதை அடுத்து அந்த படத்தை முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதம் செல்வராகவன் இயக்கும் படத்தில் படத்தில் இணைந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதால் மீண்டும் புதுப்பேட்டை கூட்டணி இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.