கிரிக்கெட்
ஐபிஎல் போட்டியில் இருந்து தோனி ஓய்வா? சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ தகவல்
கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் போட்டி 14 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்துகொண்டு இருக்கின்றது என்பதும் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் மீதி போட்டிகள் விரைவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2008ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் தொடங்கியதிலிருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் தோனி என்பது தெரிந்ததே. ஐபிஎல் போட்டியில் உள்ள எந்த ஒரு அணியிலும் இதுவரை ஒரே கேப்டன் இருந்ததில்லை என்பதும் அந்தப் பெருமை தோனிக்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக தோனியின் ஆட்டம் சுமாராக இருப்பதாகவும் அதனால் அவர் சர்வதேச போட்டியை போல் ஐபிஎல் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் மூன்று முறை ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ள தோனி இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடுவார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தோனி ஓய்வு குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது ’சிஎஸ்கே அணிக்காக தோனி இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என்றும், தற்போதைய நிலையில் அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதால் ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தோனி அவர்கள் சிஎஸ்கே அணிக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கிறார் என்பதும் அனுபவம் வாய்ந்த ஒரு தலைவராக இருக்கிறார் என்பதும், எங்களை பொறுத்தவரை தோனி அவராகவே ஓய்வு பெறும் வரை அவர்தான் எங்கள் அணியின் கேப்டன் என்றும் கூறினார். மேலும் போட்டியை முடித்துக் கொடுப்பதில் இப்போதும் தோனி சிறந்தவர் என்றும், அவரது ஆட்டம் தேவையான நேரத்தில் சரியான அளவில் வெளிப்படும் என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் தோனி ஒரு வேலை ஓய்வு பெற்றாலும் சிஎஸ்கே அணிக்கு வழிகாட்டியாக இருப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது.