இந்தியா
முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மனைவி டெல்லியில் கொலை: பரபரப்பு தகவல்!
முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மனைவி டெல்லியில் கொலை செய்யப்பட்டதாக சற்றுமுன் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் அவர்களின் மனைவி கிட்டி குமாரமங்கலம் டெல்லியில் உள்ள வசந்த் விஹார் என்ற இடத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாகவும், கொள்ளை ஒன்றின் முயற்சியின்போது அவர் கொலை செய்யப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல் வெளிவந்துள்ளது
கிட்டி குமாரமங்கலம் கொலை தொடர்பாக ராஜு என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் இருவரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. முன்னாள் அமைச்சர் மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி டெல்லியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் மற்றும் பாஜகவில் இருந்த முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் சேலம் மற்றும் திருச்சி தொகுதி எம்பியாக இருந்து உள்ளார் என்பதும் அவர் கடந்த 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.