Connect with us

தமிழ்நாடு

7 பேர் விடுதலை: தமிழக அரசு சட்டச்சிக்கலில் சிக்காது என அமைச்சர் ரகுபதி பேட்டி

Published

on

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு சட்ட சிக்கலில் சிக்காது என்று சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி சிறையில் வாடி வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில் கடந்த ஆட்சியில் 7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, அந்த தீர்மானம் கவர்னருக்கு அனுப்பப்பட்டது. கவர்னர் அந்த தீர்மானத்தின் மீது முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்திய நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக அந்த தீர்மானத்தின் குறித்த அறிக்கையை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டார். தற்போது ஜனாதிபதி இன்னும் அந்த 7 பேர் விடுதலை குறித்த தகவலை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மதுரையில் நேற்று மத்திய சிறைச்சாலையில் ஆய்வு செய்தபின் சட்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தபோது ’ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாகவும், அந்த அறிக்கை தற்போது குடியரசுத் தலைவர் கையில் இருப்பதாகவும், அவரை நான் தமிழக அரசு நிர்ப்பந்தம் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் 7 பேர் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் உரிய முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஒரு சிலர் சட்ட சிக்கலை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர் என்றும் ஆனால் தமிழக அரசு எந்த சட்ட சிக்கலில் சிக்கிக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது போல் மற்றவர்களுக்கும் பரோல் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி சம்பந்தப்பட்டவர்கள் அது குறித்து மனு அளித்தால் தமிழக அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி வந்தவுடன் 7 பேர் விடுதலைக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் தமிழக அரசு சட்ட சிக்கலில் சிக்கிக் கொள்ளாது என அமைச்சர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்1 நாள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்1 நாள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்1 நாள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்1 நாள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்1 நாள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்1 நாள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!