தமிழ்நாடு
நீட் தேர்வு விவகாரத்தில் இரட்டை வேடமா?- பாஜக விளக்கம்
நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக திமுக தரப்பு குற்றம் சாட்டியுள்ள நிலையில் அந்தக் கட்சியின் சட்டமன்றத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் கொடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் பேசிய நாகேந்திரன், ‘நீட் தேர்வுக்கு தமிழக அரசு விலக்கு கொண்டு வந்தால் ஆதரவு தெரிவிப்போம்’ என்று கூறினார். இந்நிலையில் நீட் தேர்வு குறித்து ஆராய தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது தமிழக பாஜக தரப்பு.
நீட் விலக்கு இருக்கக் கூடாது என்பதற்காகவே பாஜக இவ்வாறு வழக்குப் போட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டது. இப்படி ஒரு பக்கம் நீட் ரத்துக்கு ஆதரவு, இன்னொரு பக்கம் எதிர்ப்பு என்று இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளது பாஜக என்றும் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
இதற்கு நாகேந்திரன், ‘இரட்டை வேடம் போட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. சட்டத்துக்கு உட்பட்டு நீட் தேர்வுக்கு விலக்கு கொண்டு வந்தால் அதை ஆதரிப்போம் என்று தான் சொன்னேன்’ என்று பல்டி அடிக்கும் கருத்தைக் கூறியுள்ளார்.