சினிமா செய்திகள்
வழக்கை வாபஸ் பெற்றார் வைரமுத்து: எந்த வழக்கை தெரியுமா?
![Vairamuthu - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/Vairamuthu-1.jpg)
கவிஞர் வைரமுத்து தான் பதிவு செய்த வழக்கு ஒன்றை வாபஸ் பெற்று உள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது
கவிஞர் வைரமுத்து நாளிதழ் ஒன்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரை ஒன்றில் ஆண்டாள் குறித்து தவறாக கூறியதாக கடும் எதிர்ப்பு கிளம்பியது, இந்து மக்கள் கட்சி உட்பட பல கட்சிகள் வைரமுத்துவுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜரும் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். மேலும் வைரமுத்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது
இந்த நிலையில் வைரமுத்து தனது டுவிட்டரில் இதுகுறித்து விளக்கம் கூறியபோது, ‘தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர். எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.’’ என்றும் அவர் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் ஆண்டாள் பற்றிய கட்டுரை வெளியிட்டதற்கு எதிராக வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை கவிஞர் வைரமுத்து தற்போது வாபஸ் பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு கொளத்தூர் காவல் நிலையத்தில் ஆண்டாள் பற்றி அவதூறாக பேசியதாக வைரமுத்துவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல் நிலையத்தில் பதிவான வழக்கிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரமுத்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தற்போது கவிஞர் வைரமுத்து வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.